அன்பு அதிரைமணம் வாசக சகோதர, சகோதரிகளே,
அஸ்ஸலாமு அலைக்கும்,
கடந்த 30.05.2010 முதல் அதிரைமணம் இணையக்கடலில் மிதந்து நம் அதிரை மக்களின் இதயத்தில் இடத்தை பிடித்துள்ளது என்பதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பல சகோதரர்களின் கோரிக்கையை ஏற்று இன்று முதல் மீண்டும் பின்னூட்டப் பகுதி தனியாக அதிரைமணம்1 என்ற புதிய வலைப்பூவில் மூலம் தொடங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பதிவுடன் அதிரைமணத்தின் முந்தைய பின்னூட்டங்கள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
அதிரைமணத்துக்கு ஆதரவு அளித்து, தொடர்ந்து வருகை தரும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும், அறிவுரைகளையும்,விமர்சனங்களையும் எங்களுக்கு எழுதுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: adiraimanam@gmail.com இணையத்தை பயன்படுத்தும் அனைத்து அதிரைவாசிகளுக்கும் அதிரைமணத்தை தொடர்ந்து அறிமுகப்படுத்துங்கள்.
இன்ஷா அல்லாஹ் ஒற்றுமையுடன் ஒன்றிணைவோம் இணையத்தில்.
அன்புடன்
தாஜுதீன்